வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சமத்துவம் மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி , வரும் 19ம் தேதி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வேட்புமனு தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதிலும் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் 4 தினங்கள் தான் உள்ளது. இதில் தற்போது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல், வேட்புமனு தாக்கல் செய்ய முடியவிலை என கூறி, வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…