நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்

பாக்.,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய அந்நாட்டு அரசு லண்டனுக்கு ‘வாரன்ட்’ அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில், 3 முறை பிரதமராக இருந்து வலம் வந்தவர் நவாஸ் ஷெரீப், வயது 70.  கடந்த, 2018 ஜூலை மாதம், ஊழல் வழக்கில் இவர்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சப்தாரும் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைச்சாலையில் இருந்த  நவாஸ் ஷெரீப்பிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.உடனடியாக சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு, ஜாமின் வழங்கியது. பிரிட்டன் தலைநகர் லண்டனில்  சிகிச்சை பெற, அனுமதி வழங்கப்பட்டது.

எனவே கடந்த ஆண்டு நவம்பரில், நவாஸ் லண்டன் சென்றார். ஆனால் 8 வாரங்களில், அவர் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் ஒரு உத்தரவினை உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரப்படி அவர் பாகிஸ்தானுக்கு இன்னும் திரும்பவில்லை.
இதற்கிடையே, வரும், 22ம் தேதி, நவாஸ் ஷெரீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாக்., வெளியுறவுத் துறை செயலரிடம், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் உதவி பதிவாளர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து  நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக்கோரி, நவாஸ் ஷெரீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷெரீப்பிற்கு எதிராக கைது வாரன்ட்டை பிறப்பித்தது. இதை பாக்., அரசு லண்டனில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளது. இதில், சட்ட ரீதியிலான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துாதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
kavitha

Recent Posts

பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…

32 mins ago

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…

33 mins ago

விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.! 3 பேர் உடல் சிதறி பலி.!

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…

40 mins ago

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

1 hour ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

4 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

12 hours ago