இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன.
அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை.
இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் உள்ளன. இயற்கை வளமான மண், பல குட்டைகள், கிணறு, இயற்கை உரம் என இயற்கையோடு இணைந்த பண்ணையாகும்.
இங்கு நடைபெறும் விவசாயத்தில் வேதியியல் ரசாயன உரங்களோ மற்றும் பூச்சி மருந்துகளோ பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு 50 மாடுகள், ஆடுகள், கோழிகள், வாத்து, ஒட்டகம், குதிரை என பல வகை உயிரினங்கள் வளர்க்கப்பட்டு அவற்றின் எச்சங்களை உரமாகப் பயன்படுகிறது. மேலும் இங்கு சூரியசக்தியின் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த படுகிறது.
இங்கு விளையும் விவசாய பொருட்கள் மிகக்குறைந்த விலையில் எடை போட்டு விலைக்கு தருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் வளர்க்கின்றனர்.இப்பண்ணையை சுற்றிலும் மரவேலி அமைத்துள்ளனர். இயற்கை உரம் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பண்ணை இப்பண்ணையாகும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயற்கை பண்ணையை பார்வையிட்டுப் பயன்பெறலாம். பழங்கள் வாங்கிச் செல்லலாம்.
முழு விபரம் பெற:–
பாரதி, லியோ இயற்கை வேளாண் பண்ணை,
தேன்சிட்டி குழுமம், காவேரி ராஜபுரம், திருவள்ளூர் மாவட்டம்,
செல்: 99400 17635
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…