யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம்.
எனவே, பாடல் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம் யூடியூபிலும் மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. பாடல் பிடிக்காத விஜய் ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவை ட்ரோல் செய்தனர். இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு முடங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் யுவன் சங்கர் ராஜா விசில் போடு பாடல் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதன் காரணமாக தான் தனது இன்ஸ்டா கணக்கை Deactivate செய்து விட்டதாக கூறி ட்ரோல் செய்து வருகிறார்கள்.
உண்மையில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா கணக்கை deactivate செய்துவிட்டாரா அல்லது வேறு யாரும் ஹக் செய்துவிட்டார்களா? என்பது பற்றி அவரே அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுத்தால் மட்டும் தான் தெரிய வரும். ஏனென்றால், எக்ஸ் வலைத்தளத்தில் யுவனின் அதிகாரப்பூர்வ கணக்கு அப்படியே தான் இருக்கிறது. இருந்தாலும், விசில் பாடல் வெளியான சமயத்தில் இப்படி நடந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…