கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கோமாவில் இருக்கும் பொழுதே குழந்தையை பெற்று தற்போது மூன்று மாதங்களுக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் தனது குழந்தையை அள்ளி அணைக்கும் காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் பகுதியை சேர்ந்த கெல்சி எனும் நிறைமாத கர்ப்பிணியான பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் பாதிப்படைந்ததால் கோமா நிலைக்கு சென்று உள்ளார். அதன்பின் மேடிசன் நகரிலுள்ள எஸ்எஸ்எம் ஹெல்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் கொரோனா தொற்று, கோமா என பல்வேறு சிக்கலான சூழ்நிலையலும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிர்காப்பு கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்பும் அதிக அளவில் இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது பழைய நிலைக்கு மாறி மீண்டும் கெல்சி வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பின்பு தான் பெற்ற குழந்தை தான் என சுயநினைவுடன் தனது குழந்தையை பார்க்கும் கெல்சி மிகுந்த கண்ணீருடன் குழந்தையை கட்டியணைத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதுடன் பலருக்கும் நெகிழ்ச்சியான தருணத்தையும் உருவாக்குகிறது. இது குறித்து அந்த பெண்மணி கூறுகையில், என்னை மிகுந்த புன்சிரிப்புடன் எனது மகள் வரவேற்றாள் எனவும் அது தனக்கு மகிழ்ச்சியாக இருந்தது எனவும் அவர் கூறியதுடன், தனக்கு மருத்துவம் அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற பெண்மணி குழந்தை பெற்றுள்ளது இதுதான் தங்களது மருத்துவமனையில் முதல் முறை எனவும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…