நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… புதிய வளாகத்தில் ஜூலை 20இல் தொடங்குகிறது.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என அறிவிப்பு.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குவதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது.

மேலும் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் குறிப்பாக மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் பொது சிவில் சட்டத்திற்கான மசோதாவை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Muthu Kumar