Categories: வணிகம்

சுவிட்சர்லாந்தில் மோடி பெருமிதம் ! இந்தியா என்றாலே வணிகத்திற்கு உகந்த நாடு தான்….

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் உள்ளிட்ட 6 மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றார். உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் 190 நாடுகளின் தலைவர்கள், நிறுவன சி.இ.ஓ.க்கள், வணிக வல்லுநர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

நேற்று டாவோஸ் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, 60 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற வட்ட மேசை ஆலோசனையில் கலந்து கொண்டார். இதில் ஏர்பஸ், ஐ.பி.எம்., BEA சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கு பெற்று இருந்தனர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா என்றாலே வணிகத்திற்கு உகந்த நாடு என்றும், உலகளாவிய வணிகத்திற்கு இந்தியாவில் அற்புதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் பொருளாதார மேம்பாடு மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்பு குறித்தும் இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து முதலீட்டாளர்களை சந்தித்தும் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மாநாடு இன்று  தொடங்கியது. உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸ் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.நேற்று  மாலை 5.30 மணிக்கு ஜுரிச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டுத் தலைவர்கள் வரவேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

26 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

30 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

48 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

51 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

51 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago