மிசோரம் : 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா.!

மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மிசோரமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மிசோரமில் 231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து 286 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

எனவே மிசோரமின் மீட்பு விகிதம் 53.25 ஆக உள்ளது. கடந்த புதன்கிழமை வரை மொத்தமாக 22,175 மாதிரிகள் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மிசோரமில் இருந்து குடிபெயர்ந்த கொரோனா நோயாளி மிசோரமின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.