தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொடங்கி வைத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.!

தொழிலாளர்கள் தங்களது நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளான மகப்பேறு, திருமணம், இறப்பு சார்ந்த உதவிகளுக்கு, அதற்கான பதிவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ சாதரணமாக ஆணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தற்போது ஊரடங்கு காரணமாக ஆணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனை கணக்கில் கொண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தொழிலாளர்கள் திருமணம், மகப்பேறு, இறப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அது மட்டுமின்றி புதிதாக தொழிலாளர்கள் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும், மனுக்களில் திருத்தம் செய்வது, மாவட்டங்களுக்கு இடையிலான உறுப்பினர் பதிவு உள்ளிட்ட விண்ணப்பங்களை http://labour. tn. gov. in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.