கொரோனா தொற்றினால இன்று இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங், விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர் என்று கூறி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும்,ராஷ்ட்ரீய லோக் கட்சி தலைவருமான அஜித் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் சிங் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனளிக்காததால் இன்று அஜித் சிங் உயிரிழந்தார்.
இதனை,ராஷ்ட்ரீிய லோக்தளக் கட்சியின் மூத்த தலைவரும்,அஜித் சிங் மகனுமான ஜெயந்த் சவுத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து,அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கதத்தில் கூறியதாவது,”ராஷ்ட்ரீய லோக் கட்சியின் தலைவர் சவுத்ரி அஜித் சிங் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அஜித் சிங் விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைத்தவர். மேலும்,மத்திய அமைச்சராக பணியாற்றி பல்வேறு துறைகளை திறமையுடன் வழிநடத்தியவர்”,என்று கூறியுள்ளார்.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…