தாறுமாறாக சென்ற மினி பேருந்து.. தஞ்சையில் விபத்து.. 2 பேர் படுகாயம்.!

தஞ்சையில் தாறுமாறாக சென்ற மினி பேருந்து ஒன்று சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெட்டிப்பாளையம் சென்ற மினி பேருந்து  மருத்துவக்கல்லூரி சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த போது ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக இடது புறத்தில் நின்று கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

அதுமட்டுமில்லாமல் செல்போன் பேசி படி,  நின்று கொண்டிருந்த இருவரும்  பேருந்து மோதியதில் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தனர்.விபத்து ஏற்பட்டது தொடர்ந்து அவர்கள் இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment