பால்விற்பனை நடைபெறும், வதந்திகளை நம்பவேண்டாம்-ஆவின்.!

பால்விற்பனை குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆவின் பால்விற்பனை தடையில்லாமல் வழங்கப்படும் என்றும் இது குறித்த வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பால் உறுபதியாளர் சங்கம், இன்று முதல் பால் விநியோகம் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அரசு கொள்முதல் செய்யும் பால் விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை என பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் கூறிவந்த நிலையில், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்று முதல் பால் விநியோகம் செய்யப்போவதில்லை என கூட்டுறவு சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

ஒருசில சங்கங்களை தவிர மற்ற சங்கங்களிலிருந்து பால்கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பால்விற்பனையில் தடை இருக்காது என்பதால் பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment