Categories: இந்தியா

மீடு புயல்….மத்தியில் ராஜினாமா சேதம்…….புயலை தடுக்க புதிய சட்டம்…..விரையும் குழு…!!!

மீடு புயலால் கிளம்பிய பாலியல் புகார் குவிந்து வருவதால் புதிய சட்டம் இயற்ற மத்திய அமைச்சர்  ராஜ்நாத்சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமாவைத் தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கவும் புதிய சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு ஒரு அமைக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் தொல்லையை விசாரிக்க, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் பணியிடங்கள் தவிர்த்து பொதுவெளியிலும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகீரங்கமாக தைரியமாக விவரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதில் சிக்கிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பல்வேறு பாலியல் புகார்கள் குவியத் தொடங்கியதையடுத்து, நேற்று அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திக்கப் போவதாக எம்.ஜே.அக்பர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த குழுவில்மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு பாலியல் புகார்கள் குறித்த விசாரணையை கண்காணித்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்கும் எனவும். பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டத்திருத்தங்களையும்  இக்குழு பரிந்துரை செய்யும்.
பாலியல் புகார்கள் காரணமாக நீதித்துறைக்கு கூடுதல் சுமை ஏற்படுவதைத் தவிர்க்கவும், தற்போதுள்ள சட்டத்தின்படி நீதிமன்றங்களை நாடாமலே இருதரப்பினரிடையே தீர்வு காணவும் இந்த குழு முயற்சி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலியல் புகார்களை 3 மாத காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்ற 2013ம் ஆண்டு சட்டத்தை திருத்துவது அவசியமா என்பது குறித்தும் இந்த குழு பரிசீலிக்கும் என்று தெரிகிறது.திரைபிரபலம்,அரசியல் பிரபலம் என அனைத்து முகத்திரையையும் இந்த மீடுபுயல் கிழித்து வருகிறது.இதற்கு ஆதரவும்,எதிர்ப்பும் பெருகி வருகிறது.
DINASUVADU
 

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

4 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

20 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

31 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

34 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago