கிருஷ்ணா ஜன்மபூமி வழக்கு டிசம்பர் 10ஆம் தேதி ஒத்திவைப்பு.!

கிருஷ்ணா ஜன்மபூமி வழக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்கு விசாரணை செய்ய மதுரா நீதிமன்றம் ஒத்திவைக்கிறது.

கிருஷ்ணா ஜன்மபூமியை ஒட்டியுள்ள மசூதியை அகற்றக் கோரும் மனுவை அக்டோபர் 16 ம் தேதி மதுரா நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதற்கான விசாரணை நேற்று நடைபெற இருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளை நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், கிருஷ்ணா ஜன்மபூமி நிலத்தின் மொத்த 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமையை கோரி உத்தரபிரதேச மதுரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கி.பி 1669-70 ஆம் ஆண்டில் மதுராவின் கத்ரா கேசவ் தேவ் என்ற இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட ஒரு கிருஷ்ணா கோயிலை இடித்து முகலாய ஆட்சியாளர் ரங்கசீப் மீது வழக்கு தொடர்ந்தது குறிப்படத்தக்கது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment