“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல” – கேரளா உயர்நீதிமன்றம்..

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல”. தவறான உறவுமுறையில் ஈடுபட்டுள்ள கணவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர்க்க விரும்பினால், தற்போதைய உறவை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது.

விவாகரத்து கோரிய கணவன், 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தங்களின் திருமண உறவு சுமூகமாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு, அவரது மனைவி தனக்கு தவறான நடத்தையில் தொடர்பு இருப்பதாகக் கூறி தன்னுடன் தகராறு செய்ததாகவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். அவரது வாதங்களை நிராகரித்த உயர்நீதிமன்றம், “ஒரு மனைவி தன் கணவனின் கற்பு அல்லது நம்பகத்தன்மையை சந்தேகிக்க நியாயமான காரணங்களைக் கொண்டிருந்தால், அவள் அவனைக் கேள்வி கேட்டாலோ அல்லது அவன் முன் தனது ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினால், அதை நடத்தை அசாதாரணமாக கருத முடியாது. இது ஒரு சாதாரண மனைவியின் இயல்பான மனித நடத்தை” என்று பெஞ்ச் தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு செய்தவர் கணவர், வேறொரு பெண்ணுடன் சில தவறான நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார் என்பதையும், அந்த பெண்ணுடன் வாழ்வதற்காக அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனது வாழ்க்கையிலிருந்து தவிர்க்க விரும்பினார் என்பதையும் கிடைக்கக்கூடிய உண்மைகள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவர் விவாகரத்து ஆணையைப் பெற அவருக்கு உரிமை இல்லை. இதன் விளைவாக, மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று உயர் நீதிமன்றம் கூறியது.

கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரளா, ஒரு காலத்தில் குடும்ப உறவுகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், தற்போது சுயநலக் காரணங்களுக்காக அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளுக்காக, தங்கள் குழந்தைகளைக் கூட பொருட்படுத்தாமல் திருமண உறவுகளை உடைப்பது போல் தெரிகிறது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment