சசிகலா ஆரோக்கியத்துடன் விடுதையாகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீபெரம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையை அடுத்து சிக்கராயபுரத்தில் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்கள் விரும்பினால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ஜெயலலிதா என்ற ஒருவருக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்தவர் சசிகலா. இன்றைக்கு வேண்டுமானால் அதை யாரும் இல்லை என்று சொல்லலாம், மறுக்கலாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், சசிகலாவுக்கு ஒரு தனி வாழ்கை கிடையாது, அதுதான் உண்மை. சசிகலாவால் ஆதாயம் பெற்றவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆதாயம் பெற்றவர்கள் கூட சசிகலாவை வேண்டாம் என்று சொல்லுவது மனதிற்கு கடினமாக இருக்கு. சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் ஒரு பெண்ணாக அந்த பெண்ணுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…