மணிப்பூர் கொடூரம் இதுவரை 4 பேர் கைது -மாநில காவல்துறை ட்வீட்

மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்று பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில்,காவல்துறையினரால்  கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தி என்றும் 32 வயது நபர் முதலில் கைது செய்யப்பட்டு அவரது புகைப்படம் வெளியான நிலையில் இரண்டாவது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  “மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று மணிப்பூர் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

author avatar
Dinasuvadu Web