லவ் ட்ராக் பிளான் பண்ணி தான் மணி -ரவீனா உள்ள வந்தாங்க! ஹவுஸ் மேட்ஸ்கிட்ட உளறிய மாயா!

பிக் பாஸ்  நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு சீசனிலும் யாரவது இருவர் காதலிப்பார்கள் அதைப்போல இந்த 7-வது சீசனில் மணி மற்றும் ரவீனா இருவரும் காதலிபார்கள் அதனை கன்டென்ட்டாக விஜய் தொலைக்காட்சி வெளியீடும் என அனைவரும் எதிர்பார்தார்கள். அதைப்போலவே, இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் ஒன்றாக பேசிக்கொண்டு நடனம் ஆடி கொண்டு வருகிறார்கள்.

இதனையடுத்து நேற்று பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் லவ் கன்டென்ட் எல்லாம் கொடுக்குறீங்களா? என்பது போல சூசகமாக மணி மற்றும் ரவீனாவிடம் கேட்டுக்கொண்டு காலாய்த்தார். பிறகு ரவினா வேதனையடைய பிரதீப் சாரி சும்மா கலாய்தேன் என்று கூறினார். ரவீனா வருத்தமடைந்தவுடன் மணியும் அவரிடம் சென்று சாரி கேட்டார்.

பிக் பாஸ் 7 : நீ வெளியே போனா நானும் போயிருவேன்! மாயா எடுத்த அதிரடி முடிவு?

இருப்பினும் வழக்கமாக மணியிடம் எப்படி விளையாடி கொண்டிருப்பாரோ அதே போலவே தான் விளையாடி வருகிறார். இந்த நிலையில் வீட்டிற்குள் இருக்கும் மாயா  ரவீனா மற்றும் மணி இருவரும் லவ் ட்ராக் பிளான் பண்ணி தான் உள்ளவே வந்திருக்கிறார்கள் என் சக போட்டியாளர்களான விஸ்ணு, பூர்ணிமாவிடம் கூறுகிறார்.

அதற்கு பூர்ணா அவர்கள் இருவரும் செய்வது பார்பதற்கு ஒரு சமயம் மிகவும் கடுப்பாகி விடுகிறது. சில சமயம் இரண்டு பேரையும் பார்க்கும் போது க்ரிஞ் செய்வது போல இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு மாயா” மணி தன்னை சாண்டி மாஸ்டர் என்று நினைத்து கொண்டு விளையாடுவது போல எனக்கு தோணுகிறது என்று கூறுகிறார்.

பிக் பாஸ் 7 : “உன்னால முடிஞ்சா என்ன அடி”! விஜய்யுடன் மோதும் விஷ்ணு!

அதற்கு விஸ்ணு மாஸ்டருடன் அவர் இருந்த காரணத்தால் அவர் அவரிடம் நிறைய அறிவுரைகளை கேட்டு வந்திருப்பார். அதைப்போல, பாடல்களை பாடி ஒரு பிரச்சனை வந்தாலும் அதில் இருந்து தப்பித்து விடுகிறார். அதற்கு பூர்ணிமா நீங்கள் சொல்வது சரி தான் அவர்கள் இருவரும் இப்படியே வைத்தால் மக்கள் நம்மளை காப்பாற்றி விடுவார்கள் என்று பேசுகிறார்கள்.

இறுதியில் விஸ்ணு மக்களுக்கு இது போர் அடித்துவிட்டது என்றால் குறைவான வாக்குகளை பெற்று இருவரும் வெளியேறிவிடுவார்கள்” என கூறினார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே மணி மற்றும் ரவீனா இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். குறிப்பாக இருவரும் இணைந்து நடனம் ஆடுவது சுற்றுலா செல்வது அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.