மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி…மருத்துவமனையில் அனுமதி..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் கிட்டத்தட்ட 1 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மணிரத்னத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் விரைவில் குணமடைந்து நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment