கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது…!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சொத்து தகராறு காரணமாக தனக்கு நெருக்கமாக உள்ள சில உறவினர்கள் அவனை கடத்தி உள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியாகிய புகார் அளித்தவரின் சகோதரர் லீலுவிடம் போலீசார் நடத்தியுள்ளனர். அப்பொழுது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுவனை நான் தான் கடத்தி, விஷம் வைத்து கொன்று ஆற்றில் உடலை தூக்கி எரிந்து விட்டேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த 2001-ஆம் ஆண்டு தனது மூத்த சகோதரரை இதே போல  கொன்றதாகவும், அதன் பின் சில மாதங்களுக்கு பின்பாக அவருடைய 8 வயது மகளை விஷம் வைத்துக் கொன்றதாகவும், மூன்று வருடங்களுக்கு முன்பதாக அவருடைய மூத்த மகளை கொன்றதாகவும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பதாக மூத்த சகோதரரின் மகன் நிஷாவை கொன்றதாகவும் கூறியுள்ளார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தனது சொத்தை பிரித்து கொடுக்க மனம் இல்லாததால் இவ்வாறு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளியின் வாக்குமூலத்தை ஆடியோவாக பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை கைது செய்ததுடன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Rebekal

Recent Posts

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

3 mins ago

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…

29 mins ago

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

58 mins ago

போஸ்டரில் கூட வர மாட்டேன்னு சொன்னாங்க! பிரேமம் குறித்து உண்மையை உடைத்த மடோனா!

Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…

1 hour ago

கிரிக்கெட்ல இத்தனை வகை டக்-அவுட் இருக்கா ? தெரிஞ்சுக்கோங்க !!

Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…

1 hour ago

7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…

1 hour ago