கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தேதியில் மாற்றம்..!! கோவில் நிர்வாகம் அறிப்பு…!!!

By

கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் விழாக்களில், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இந்த சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு பதிலாக, ஏப்ரல் 30ஆம் தேதி, காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்கு நடைபெறும் என்று கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Dinasuvadu Media @2023