மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் எனவே சட்டப்பேரவை கூட்டி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும் அதிகாரமானது ஆளுநருக்கு இல்லை இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கே இது குறித்து முழு அதிகாரம் உள்ளதாக தனது வாதத்தை முன்வைத்தார். .
மேலும் அவர் ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அனைவரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் அவர்களின் ராஜினாமாவை ஏற்கும் முன் உரிய விசாரணையை அவர்களிடம் நடத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.மேலும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தலை நடத்தி முடித்த பிறகு தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தள்ள பாஜக பெரும்பான்மையை இழந்துவிட்டதால் கமல்நாத் அரசு ஒருநாள் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இது குறித்து விசாரணையை நடத்தி வருகிறது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய பிரதேசத்தில் கடும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…