விஜயகாந்த் மேல ஒழுங்கா அன்பு காட்டல…அருமை இப்போது தான் புரியுது…லிவிங்ஸ்டன் வேதனை!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இல்லாதபோது தான் அவருடைய அருமை புரிகிறது என லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் அவருடைய எண்ணத்தை காலத்தால் அழியாதவையாக பார்த்துக்கொள்ளும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சாப்பாட்டில் இருந்து பணம் கொடுத்து உதவுவது பல உதவிகளை விஜயகாந்த் செய்து இருக்கிறார். எனவே, அவர் இவ்உலகில் இல்லை என்றாலும் கூட தினம் தினம் அவரை பற்றி பலரும் பெருமையாக பேசி கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், விஜயகாந்துடன் படங்களில் இணைந்து நடித்த பிரபல நடிகரான லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் இருக்கும்போது அவருடைய அருமை புரியவில்லை இப்போது தான் புரிகிறது என வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய லிவிங்ஸ்டன் ” என்னை நடிகராக அறிமுகம் செய்தது கேப்டன் விஜயகாந்த் தான். அறிமுகம் செய்தது மட்டுமின்றி தொடர்ச்சியாக என்னை படங்களிலும் நடிக்க வைத்தார்.

குறிப்பாக பாட்டுக்கு ஒரு தலைவன், ஏழை ஜாதி, என எல்லா படங்களிலும் தொடர்ச்சியாக எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இப்போது தான் நான் அதனை நன்றியாக சொல்கிறேன். அந்த அளவிற்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு என் மீது பாசமாக அவர் இருந்தார். அவர் என் மீது செலுத்திய அன்பை போல நான் அவர் மீது செலுத்த தவறிவிட்டேன்.

அவர் இப்போது இந்த இல்லை அவரை இழந்த பிறகு தான் எனக்கு இது புரிகிறது . ஒரு விலை உயர்ந்த பொருள் நம்மலுடன் இருக்கும்போது அதனுடைய அருமை நமக்கு புரியாது இல்லாத போது தான் புரியும் அப்படி தான் கேப்டன். உண்மையில் அவரை போல ஒரு நல்ல மனிதரை நம்மலால் பார்க்கவே முடியாது. அவரை ரொம்பவே நான் மிஸ் பண்றேன்” எனவும் லிவிங்ஸ்டன் வேதனையுடன் கூறியுள்ளார்.

Recent Posts

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

4 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

7 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

11 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

11 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

11 hours ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

11 hours ago