பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறினார் லியோனல் மெஸ்ஸி.!

லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை விட்டு வெளியேறுவார் என்று PSG தலைவர் நாசர் அல்-கெலைஃபி அறிவித்துள்ளார். 

கிளெர்மோன்ட் எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நேற்று ஆடிய கடைசி போட்டியுடன் லயோனல் மெஸ்சி PSG அணியில் இருந்து வெளியேறினார்.

இந்த சீசனின் முடிவில் லியோனல் மெஸ்சி லீக் 1 கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அறிவித்துள்ளது. இறுதியாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் PSG ஆகஸ்ட் 2021-ல் மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணியில் சேர்த்து கொண்டது.

அந்த அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வரும் மெஸ்சி, கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்கு சென்றதால் 2 வாரங்கள் விளையாட அந்த அணி நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மெஸ்ஸி சவுதி அரேபிய கிளப் அல்-ஹிலாலிடமிருந்து விளையாடுவதற்கான முறையான கடிதத்தைப் பெற்றுள்ளார், மேலும் எஃப்சி பார்சிலோனா அல்லது மேஜர் லீக் சாக்கருக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.