ஆகஸ்ட் 1 முதல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் திட்டம்!!

மகாராஷ்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் தொடங்கும்’ என்றார்.

“வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை அங்கீகரித்தல் மற்றும் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்ததை அடையாளம் காணவே இந்த திட்டம்,” என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment