இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு – 8 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இன்று(ஜூலை 19) காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  8 பேர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்ரா மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தின்படி, காலை 9 மணியளவில் ஒரு மாவு மில்லுக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது,இதில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் மோக்தா தெரிவித்துள்ளார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment