வில்லு படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து பல படங்களின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் தற்போது இனி வரவிருக்கும் படங்களை குறித்த புது புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் பிரபுதேவா மற்றும் நயன்தாரா அடுத்த படத்தில் இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா இயக்கத்தில் இசாரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்க கட்டிடங்களுக்கு நிதி திரட்டுவதற்காக இரட்டை ஹீரோ திட்டம் ஒன்றை எடுக்க போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். ‘இரட்டை ராஜா வெள்ளை ராஜா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் கார்த்தி மற்றும் விஷால் நடிப்பதாக கூறப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட இந்த படம் கடைசியில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த படத்தை எடுக்க போவதாகவும், இதில் விஷாலுக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கார்த்தி நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…