கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா (கொவிட்-19) வைரஸின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதன்முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் பாதிப்பு சீனாவைத் தாண்டி இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது.
இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் வைரசால் நேற்று (வியாழக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,383-ஆக உயர்ந்துள்ளது. அதில் நேற்று மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரசால் புதிதாக 5,090 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,000-ஐ தொட்டுள்ளது. இதனிடையே இந்த கொடூர வைரசால் சுகாதார ஊழியர்கள் 1,716 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீன மருத்துவனையின் மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நடனமாட வைத்து, நோயிலிருந்து மீள்வது குறித்து நம்பிக்கையூட்டி வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் தீவிர ஆய்வு செய்து வருகிறது உலக சுகாதாரத்துறை.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…