சினிமாவாக உருவாகும் கேரள விமான விபத்து சம்பவம்.!

கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து சம்பவம் கேலிகெட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் படமாக உருவாகவுள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி இரவு 10குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த உண்மை சம்பவத்தை வைத்து மலையாளத்தில் படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும், அதற்கு ‘கேலிகெட் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாயா என்பவர் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு மஞ்சித் மரஞ்சேரி கதை திரைக்கதை எழுதியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்த படத்தை டேக் ஆப் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.