மணப்பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி இல்லை!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இஸ்லாமிய மணமகள் தன்  திருமணத்தின் போது  மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, மணப்பெண்ணை மசூதிக்குள் அனுமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று பாலேரி-பரக்கடவு மஹால் கமிட்டி நேற்று அறிவித்தது. தவறுதலாக மணப்பெண் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குழு தெரிவித்துள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள பரக்கடவ் ஜும்ஆ மஸ்ஜித் குட்டியாடியைச் சேர்ந்த கே.எஸ்.உமீருக்கு மசூதியைச் சுற்றியுள்ள வளாகத்தில் தனது மகளின் திருமணத்தை நடத்த அனுமதி அளித்துள்ளது. உமீரின் மகள் பஹ்ஜா தலிலா, ஃபஹத் காசிம் என்பவரை ஜூலை 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு மணமகளின் குடும்பத்தினர் மசூதியின் பொதுச் செயலாளரிடம் தலீலாவை மசூதிக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல், செயலர் தானே அனுமதி அளித்ததாக குழு தெரிவித்துள்ளது.

“மசூதிக்கு வெளியே திருமணம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. இருப்பினும், அலுவலகப் பணியாளர் ஒருவர், மணமகள் மசூதிக்குள் இருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார். குறித்த நபர் தவறுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்” என்று குழு மேற்கோள் காட்டியது. மஹால் கமிட்டி உறுப்பினர்கள் மணமகளின் குடும்பத்தினர் விதிமுறைகளை மீறியதாகவும், முதலில் மகளை மசூதிக்குள் அழைத்துச் சென்று பின்னர் தொடர்ச்சியான புகைப்படங்களை எடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி, பெண்கள் பொதுவாக மசூதிகளில் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கிடையில், மணப்பெண்ணின் தந்தை கே.எஸ்.உமீர் கூறுகையில், மகள் தலீலா மசூதியில் அவளது திருமணத்தை காண இரு குடும்பத்தினரும் விரும்பினர். அதே போல், மணமகள் தலீலா மசூதிக்குள் நடைபெற்ற தன் திருமண விழாவைக் காண முடிந்தது. எங்கள் பகுதியில் இவ்வாறு மணமகளை மசூதிக்குள் அனுமதிப்பது இதுவே முதல்முறை. இஸ்லாத்தில் இடமில்லாத இத்தகைய நடைமுறைகளை நாம் கைவிட வேண்டிய நேரம் இது. எனது மகள் உட்பட மணப்பெண்களுக்கு அவர்களின் திருமணத்தை நேரில் காண உரிமை உண்டு என்றார்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment