உலகம்

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இதில் 14 வருட கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்து, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் பிரிட்டனை ஆளும் ஆளும் அதிகாரத்தை அளித்துள்ளனர்.

இங்கிலாந்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 412 தொகுதிகளை கன்சர்வேட்டிவ் கட்சியும், 121 தொகுதிகளை தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளுக்கு அடுத்து ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளளார். மேலும், பிரதமராக தனது இறுதி உரையையும் சற்று முன்பு நிகழ்த்தினார்.

ரிஷி சுனக்கின் ராஜினாமாவை அடுத்து இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ், தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மரை அதிகாரபூர்வமாக புதிய பிரிட்டன் பிரதமராக அறிவித்து. ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். புதியதாக பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராக தனது முதல் உரையை மக்கள் முன் ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நீங்கள் (மக்கள்) எங்களுக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளீர்கள். நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவும், நமது நாட்டை ஒன்றிணைக்கவும் இந்த ஆணையை பயன்படுத்துவோம்.  நாடு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளது. நாம் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும். நாட்டை மாற்றுவது என்பது சுவிட்ச் ஆப், ஆன் செய்வது போல அல்ல. ஆனால், மாற்றத்திற்கான வேலை இப்போது தொடங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

பொது சேவை என்பது ஒரு வரம். நீங்கள் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் எனது அரசாங்கம் உங்களுக்கு சேவை செய்யும்.  எங்களின் பணி அவசரமானது, அதை இன்றே தொடங்குகிறோம், மரியாதையுடனும் பணிவுடனும், தேசத்தை புதுப்பிக்கும் பணியில் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று உரையாற்றினார். மேலும், இங்கிலாந்தின் முதல் ஆசியபின்னணி கொண்ட பிரதமராக ரிஷி சுனக் செயல்பட்ட முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்றும் பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உரையாற்றினார்.

Recent Posts

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்'  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…

11 mins ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

13 mins ago

உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு  தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…

15 mins ago

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோயம்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.!

உதவியாளருடன் இணைந்த Data Entry ஆட்சேர்ப்பு : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி…

26 mins ago

ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் கிருமிகள் ..!பிளான் – B ரெடி ..!

ஒலிம்பிக் 2024 : ஒலிம்பிக் போட்டிகளில், நடைபெற இருக்கும் நீச்சல் போட்டி நடைபெற இருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை-26ம் தேதி பிரான்ஸ் நாட்டின்…

40 mins ago

நீட் முறைகேடு.! தவறு செய்தவர்கள் கண்டறியாவிட்டால்..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த…

40 mins ago