கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து 6வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. காலையில் நடைபெற்ற மாநிலங்களவையில் வங்கி திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மார்ச் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இதையடுத்து, மதுரை எம்பி வெங்கடேசன், கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுரக்குடி நீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து மத்திய ஆயுஷ் துறை எந்த மாதிரியான ஆய்வை மேற்கொண்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தின் கபசுர குடிநீர் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது நன்கு தெரியும்.
தமிழகத்தில் இதுவரை 120 மெட்ரிக் டன் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் சித்த மருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது என ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், கொரோனா சிகிச்சையில் கபசுரக்குடிநீர் நம்பிக்கை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தொற்றுநோய் திருத்த மசோதாவை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…