நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான்.?

19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கதிர்.  இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2002- ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் காதல் வைரஸ் .இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அடுத்ததாக கன்னடத்தில் ‘நான் லவ் ட்ராக்’ என்ற படத்தை இயக்கியனார். இந்த திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியானது. அடுத்ததாக இயக்குனர் கதிர் எந்த ஒரு திரைப்படமும் இயக்கவில்லை.

மேலும் கதிர் இயக்கத்தில் வெளியான அணைத்து தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இவர்களது கூட்டணியில் வெளியான அணைத்து படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது 19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதனபடி அறிமுக நடிகர் கிஷோர் என்பவரை வைத்து படம் இயக்குனர் கதிர் படம் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சென்னை, பெங்களூரு, மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.