#JustNow: தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறது திமுக – ஜேபி நட்டா பேட்டி

பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழக வந்துள்ள ஜேபி நட்டா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காரைக்குடியில் சென்றுள்ள ஜேபி நட்டா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ராமநாதசுவாமியின் அருளை பெற்ற தெம்பில் உள்ளேன்.

இலக்கியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்திற்கு வந்துள்ளேன். கடந்த 2 நாட்களில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துக்களை கேட்டுள்ளேன். வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

திமுக அரசு தமிழ்நாட்டில் மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது என்றும் திமுக அரசு தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறது எனவும் குற்றசாட்டிய அவர், வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து அரசியல் செய்து வருகிறது திமுக எனவும் விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். திமுக அரசு மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது என்றும் கூறினார்.

Leave a Comment