பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களிலுமே தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் ஏன் செல்லவில்லை எனவும் ஆரி உண்மைக் காரணங்களை தற்பொழுது கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது சீசன் 4 முடிவடைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், நடிகரும் சமூக ஆர்வலருமான ஆரி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பெயரையும் பெற்று வெற்றியாளராகியுள்ளார். இந்நிலையில் முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
அதில், அவருக்கு பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து அழைப்பு வந்ததாகவும் ஆனால் முதல் சீசனில் தான் கலந்து கொள்ளாததற்கு காரணம் ஜல்லிக்கட்டு பிரச்சனை நடந்து கொண்டிருந்ததும் அப்பொழுது அந்நிகழ்ச்சி குறித்த சரியான ஐடியா இல்லாததும் தான் கரணம் எனவும், இரண்டாம் சீசனில் அழைப்பு வந்த பொழுது தனக்கு திருமணமாகி இருந்ததாகவும், மூன்றாம் சீசனில் அழைப்பு வந்தபோது தனது மகள் மிகவும் குழந்தை என்பதாலும் செல்லவில்லை என கூறியுள்ளார். தற்பொழுது சூழ்நிலைகள் நன்றாக இருந்ததால் தான் நான்காவது சீசனில் கலந்து கொண்டதாகவும், இந்த சீசனில் தான் கலந்து கொள்வதற்கு முக்கியக் காரணமே இயக்குனர் தாமிரா தான் எனவும் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…