எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை 13.01.2022 அன்று நடைபெறுவது பொருத்தமற்றதாகும்.
எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (13.01.2022) நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை 13.01.2022 அன்று நடைபெறுவது பொருத்தமற்றதாகும். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக, நேற்று மட்டும் சென்னையில் 6484 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இக்கூட்டத்தை நடத்துவது அரசுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டப் பின்னரே கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற வேண்டும். நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு உடன்பாடில்லை என்றாலும் இக்கோரிக்கையை மீறி நடைபெறுமாயின் பெருந்திரளாக கூட்டத்திற்கு வருவதை தவிர வேறுவழியில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…