இது அடர்த்தியான மழை என்பதால், வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், அதன் விளைவாக தமிழகத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால் சென்னை அண்ணாநகர் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் தற்பொழுது கனமழை பெருத்து வரும் சூழலில், இதுகுறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், இது அடர்த்தியான மழை என்பதால், வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் எந்த நகரமாக இருந்தாலும் எத்தனை அடர்த்தியான மழையை தாக்குபிடிப்பது கடினம் என கூறினார்.
அதுமட்டுமின்றி, சென்னையில் சில மணிநேரத்திலே 150 முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்து வருவதாக குறிப்பிட்ட அவர், மழைநீர் வடியும்வரை சில மணிமேரத்தில் தண்ணீர் தேங்கியிருப்பது ஒன்றுதான் எனவும் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…