இந்த நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.!

தமிழக்கதில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அந்த வகையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல், கலை விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.