சுஷாந்த் சிங் வழக்கில் பீகார் விசாரணை அதிகாரிகளை தனிமைப்படுத்துவது தவறானது -பாஜக எம்பி !

பிரபல நடிகர் சுஷாந் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ANI பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் வழக்கில் தொடர்புடைய  பீகார் அதிகாரிகளை தனிமைபடுத்தி இருப்பது தவறானது என்றும் மேலும் இவ்வாறு அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது சுஷாந்த் சிங் மரணத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருப்பதாக கூறினார்.

இதனை என்ஐஏ அமலாக்க இயக்குநரகம்  கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.