எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா.??

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நேற்று முன்தினம் காரைக்குடியில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் 51 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன் படி, இந்த திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.