தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை.
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தை மாத மாற்றப்போல் வரும் செய்டுகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்வோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை பின் ஏதற்காக, இது. போன்ற செய்டுகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது அதேபோல் கடந்த வாரத்தில் மதுரை ஜெய்ஹிந்தியாத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று முன்னாள் முதல்வர் அவர்களின் படம் வைத்த செய்திகள் பின்னர் மறுநாளே அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.
இது போன்ற செயல்கள் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமலேயே எதாவது ஒரு அதிகாரம் மையத்தின் தலையீட்டால் நட்க்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகாமமக்களுக்கு தொடர்ந்து எழுவதாக சொல்கிறார்கள்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்ப் புத்தாண்டு பதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை ஆதாரங்களுடன் அன்றே தெரிவித்து இருக்கிறார். அதை சரியாக புரிந்து கொண்டாலே போதும், மக்களை குழப்புபவர்களும் தெளிவடைவார்கள் எனவே இது போன்று மக்களுக்கு உதவாத செயல்களில் ஈடுபடுவதில் தங்கள் நேரத்தை செல்விடுவதை தவிர்த்து குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழி வகை செய்தாலே போதும் அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஆகையால், தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து. மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…