ஈரானின் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி உக்ரைன் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.அந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் இறந்ததாக ஈரான் அறிவித்தது.
இந்த தாக்குதல் அமெரிக்க நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் உக்ரைன் விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வெடித்து சிதறும் காட்சியை இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் வெளியிட்டனர்.இதை தொடர்ந்து ஈரான் இராணுவம் அமெரிக்க போர் விமானம் என எண்ணி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறினார்.இந்நிலையில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஈரானின் சிவில் விமான போக்குவரத்து துறை முதல்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது.
அதில் உக்ரைன் விமானத்தை 2 டோர் எம்-1 ஏவுகணையால் தாக்கியது தெரியவந்து உள்ளது.இந்த ஏவுகணைகள் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடியது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…