IPL 2020: கொரோனா அதிகரிக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடத்த வாய்ப்பு?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறும் என தகவல் வெளியானது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, விளையாட்டு போட்டிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி ஐபிஎல் 2020 தொடர் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறும் எனவும், இந்த போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்த அங்கீகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு விமானங்களை வாடகைக்கு எடுக்கவும், ஹோட்டல்களை புக் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.