கேரளாவில் சுவாரசிய சம்பவம்.! திருட வந்த இடத்தில் புகைப்படத்தை பார்த்து மனம் மாறிய திருடன் .!

  • கேரளாவில் உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திருடன் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடித்து உள்ளான்.
  • அப்போது ஒருவீட்டில் அந்த திருடன் இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்து விட்டேன் என திருடன் சுவற்றில் எழுதி இருந்தார்.

கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடப்பட்ட 5 கடைகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது ஒரு கடைக்கு அருகில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

இந்த வீட்டிலும் திருட்டு நடந்திருக்கலாம் என எண்ணி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் இருந்து ஒரு பொருள்கள் கூட திருட்டு போகவில்லை. மேலும் வீட்டின் சுவரில் திருடன் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தது தெரியவந்தது.

அந்த சுவற்றில் “இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்துவிட்டேன். வீட்டில் இருந்த புகைப்படங்களை வைத்து தான் இது ராணுவ வீரரின் வீடு என எனக்கு  தெரிந்தது. தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என சுவற்றில் எழுதி இருந்தது.

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Dinasuvadu desk
Tags: #Keralathief

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

3 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

3 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

3 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

4 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

4 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

4 hours ago