ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்…! அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்…! -தயாநிதிமாறன்

அதிமுக  பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக எம்.பி தயாநிதிமாறன் அவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியில், புதிய அங்கன்வாடி மையம் மற்றும் காழிப்பிட கட்டடத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்..! அதிமுக  பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடன் சுமையை வரவிருக்கும் தளபதியின் ஆட்சிக்கு விட்டுவிட்டு தான் செல்ல போகிறார்கள். ஏனென்றால், உங்களுக்கே தெரியும், இவ்வளவு நாளும் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது சாகும் போது சங்கரா…! சங்கரா…! இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்  ஏமாற்றும் அறிவிப்புகள் தான்.’ என  கூறியுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

5 mins ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

32 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

1 hour ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

1 hour ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago