இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாஸாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது விலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.80 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாலியல் சம்பந்தமான பிரச்னைகளில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பி ஓடி, கைலாஸா தனி தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதில் குடியேறி அதனை தனி நாடாகவும் அறிவித்திருந்தார். இது குறித்து அவர் அவ்வப்போது சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நித்தியானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கைலாஸாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், இதேபோன்று ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளிலும், கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இந்த நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…