Monday, June 3, 2024

கடும் சரிவில் இந்தியப் பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி.!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த சில வாரம் முதலே சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.  அதன்படி, கடந்த 17ம் தேதி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 700 புள்ளிகள் வரை சரிந்தது. அதோடு தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி வர்த்தக நாளின் முடிவில் 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த பெரிய மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்ற காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 65,925 என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. அதன்படி, சென்செக்ஸ் 350.23 புள்ளிகள் சரிந்து 65,595.24 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல, என்எஸ்இ நிஃப்டி 97.30 புள்ளிகள் சரிந்து 19,567.40 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,945 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,664 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES