ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் கொடுத்த கேட்சை இந்திய அணி கேப்டன் விராட் கோலி தவறவிட்டார்.
இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்தனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பிஞ்ச் மற்றும் ஷார்ட் இறங்கினார்கள்.போட்டியில் 3 ஓவரை பூம்ரா வீசினார்.அதில் முதல் பந்தை பிஞ்ச் எதிர்கொண்டார்.அப்போது அவர் ஷார்ட் கவர் திசையில் நிண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலியை நோக்கி அடித்தார்.விராட் கோலியோ அந்த கேட்சை தவறவிட்டார்.இதனால் பிஞ்ச் மறு வாழ்வு பெற்று விளையாடி வருகிறார்.தற்போது வரை ஆஸ்திரேலிய அணி6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் பிஞ்ச் 25*, லின் 6* ரன்களுடன் உள்ளனர்.இந்திய அணியின் பந்து வீச்சில் கலீல் அகமது 1 விக்கெட் எடுத்துள்ளார்.
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…