ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச்க்கு மறுவாழ்வு கொடுத்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி…!

ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச்க்கு மறுவாழ்வு கொடுத்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி…!

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் கொடுத்த கேட்சை இந்திய அணி கேப்டன் விராட் கோலி  தவறவிட்டார்.

இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்தனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பிஞ்ச் மற்றும் ஷார்ட் இறங்கினார்கள்.போட்டியில் 3 ஓவரை பூம்ரா வீசினார்.அதில் முதல் பந்தை பிஞ்ச் எதிர்கொண்டார்.அப்போது அவர் ஷார்ட் கவர் திசையில் நிண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலியை நோக்கி அடித்தார்.விராட் கோலியோ அந்த கேட்சை தவறவிட்டார்.இதனால் பிஞ்ச் மறு வாழ்வு பெற்று விளையாடி வருகிறார்.தற்போது வரை ஆஸ்திரேலிய அணி6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை  இழந்து  38 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் பிஞ்ச் 25*,  லின் 6* ரன்களுடன் உள்ளனர்.இந்திய அணியின் பந்து வீச்சில்  கலீல் அகமது 1 விக்கெட் எடுத்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *