நிர்பையா வழக்கு… குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றம்… நள்ளிரவு முதல் அதிகாலை வரை விவரம் உங்களுக்காக….

நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட உள்ள நான்கு பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா குற்றவாளிகளின்  நேற்று நள்ளிரவு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடும் செய்தனர்.

இந்த குற்றவாளிகள் சார்பில் ஏபி சிங் மனு தாக்கல் செய்தார். 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஏபி சிங் நள்ளிரவில் உச்ச நீதிமன்ற பதிவாளரின் வீட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த  வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் அதிகாலை 2.40 மணிக்கு விசாரிக்க தொடங்கியது. குற்றவாளிகள் தரப்பில் ஏபி சிங் ஆஜராகி வாதாடினார். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார்.

நிர்பயா குற்றவாளிளுக்கு 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் விசாரணை தொடங்கியது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குற்றம் நடந்த சமயத்தில் 18 வயது நிறைவடையாதவர் என ஏபி சிங் வாதிட்டார்.மேலும் அவர்,  பள்ளி சான்றிதழ், வருகை பதிவேடுகளை நீதிமன்றத்தில் காட்டி வாதிட்டார். அப்போது நீதிபதி பூஷண் இந்த சான்றிதழ் எல்லாம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டவை தான் என்றார்.  கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக எந்த அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். நீங்கள் இப்போது வைக்கும் வாதம் எல்லாம் ஏற்கனவே வாதிடப்பட்டவை தான் என்று அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்தார்.

இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் குறைந்த  பட்சம் இரண்டு மூன்று நாள் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி போட வேண்டும் என பவன்( குற்றவாளி) விரும்புகிறார் என்றார். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் பவனின் கருணை மனு நிராகரிப்பு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியானது. இறுதியாக குற்றவாளிகளை பார்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க கோரி அவர்களது வழக்கறிஞர் ஏபி சிங் கேட்டார். அதை அனுமதிக்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தி கூறினார். ஆனால் இது மிகுந்த வலியான விஷயம் .

அத்துடன் அப்படி ஒரு வழக்கம் இல்லை என திகார் சிறை நிர்வாக ம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. அவர்கள் டெல்லி திகார் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு  சற்று முன் மருத்துவப் பரிசோதனை நிறைவுபெற்றது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் அந்த குற்றவாளிகள் தற்போது தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் நான்கு பேரும் தற்போது தூக்கிலடப்பட்டதாக டெல்லி திகார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Kaliraj

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

4 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

4 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

5 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

5 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

6 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

6 hours ago